விளம்பர பேனர்கள் அகற்றப்படுமா?

Update: 2024-04-28 12:45 GMT

கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனி சிக்னல் அருகே பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு கணுவாய், தடாகம், ஆனைகட்டி, வேலாண்டிபாளையம் செல்லக்கூடிய பஸ்கள் நின்று செல்வது வழக்கம். இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகப்படியான பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் பஸ் நிறுத்த நிழற்குடையில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே அவற்றை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்