பூட்டி கிடக்கும் புறக்காவல் நிலையம்

Update: 2024-04-28 12:42 GMT

கோவை தடாகம் சாலை கோவில்மேடு சந்திப்பு பகுதி கே.கே.புதூர், வெங்கடாபுரம் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் முக்கிய பகுதியாக உள்ளது. இங்கு குற்ற சம்பவங்களை தடுக்க சாய்பாபா காலனி போலீஸ் நிலையம் சார்பில் புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது. தற்போது அங்கு போலீசார் யாரும் இல்லை. மேலும் பூட்டப்பட்டு உள்ளது. இதனால் குற்ற சம்பவங்களை தடுப்பதில் சிக்கல் நிலவுகிறது. எனவே அந்த புறக்காவல் நிலையத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் செய்திகள்