தெருநாய்கள் தொல்லை

Update: 2024-04-21 17:30 GMT

கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் எதிரில் முல்லை நகர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் தெருநாய்கள் தொல்லை மிகவும் அதிகமாக உள்ளது.. இரவு நேரங்களில் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளை நாய்கள் துரத்துவதால் பலரும் கீழே விழுந்து காயமடைகிறார்கள். மேலும் நாய்கடியாலும் பலரும் பாதிக்கப்படுகிறாார்கள். இரவில் கூட்டம், கூட்டமாக சுற்றக் கூடிய நாய்களால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுதர்சன், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்