எச்சரிக்கை பலகைகள் வைக்கப்படுமா?

Update: 2024-04-21 17:26 GMT

கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மேலுமலை அருகேயும், கொல்லப்பள்ளி அருகேயும் மேம்பால கட்டுமான பணிகளுக்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. வாகனங்கள் செல்வதற்காக மாற்று சாலை அமைக்கப்பட்டுள்ளன. இந்த பகுதியில் இரவு நேரத்தில் செல்லும் வாகனங்களும், சாலை பணிகள் நடைபெறுவது தெரியாமல் விபத்துகள் நடக்க வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக அந்த பகுதி முழுவதும் வெளிச்சமின்றி இருட்டாக இருப்பதால் வாகன ஓட்டிகள் பலரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே, சாலை பணிகள் நடைபெறும் இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைத்திடவும், அந்த பகுதியில் போதிய மின் விளக்குகள் அமைத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரவீன், குருபரப்பள்ளி.

மேலும் செய்திகள்