அதிகாரிகள் நடவடிக்கை

Update: 2024-03-17 18:06 GMT

சேந்தமங்கலம் அருகே உள்ள காந்திபுரத்தில் இருந்து கொல்லிமலை அடிவாரத்திற்கு செல்லும் சாலை உள்ளது. அந்த சாலையின் வழியே புதிதாக உயர் மட்ட பாலம் சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்டது. அதைதொடர்ந்து அந்த பாலத்தின் அடிப்பகுதியில் நிழலாக இருப்பதால் மதுபிரியர்கள் மது அருந்தி வருகின்றனர். மேலும் சிலர் மது பாட்டில்களை அங்கேயே உடைத்து அட்டகாசம் செய்து வருகின்றனர். எனவே மதுபிரியர்கள் அந்த பாலத்தின் அடியில் செல்லாத வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுப்புராஜ், காந்திபுரம்.

மேலும் செய்திகள்