கழிவறை திறக்கப்படுமா?

Update: 2024-02-18 17:18 GMT

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி பஸ் நிலையத்தில் இருந்து தர்மபுரி, சேலம், பாப்பிரெட்டிப்பட்டி, மேட்டூர், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு 50-க்கும் மேற்பட்ட பஸ்கள் சென்று வருகிறது. இப்பகுதிகளுக்கு செல்ல சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் பொம்மிடி பஸ் நிலையத்திற்கு வந்து தான் செல்ல வேண்டும். அவ்வாறு, வந்து செல்லும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை. மாற்றுத்திறனாளிக்கான கழிவறை பூட்டப்பட்டு உள்ளது. இதனால், மாற்றுத்திறனாளிகள் இயற்கை உபாதைகள் கழிப்பதற்கு கழிவறை செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். எனவே கழிவறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

-தர்மலிங்கம், பொம்மிடி.

மேலும் செய்திகள்