தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2024-02-11 13:39 GMT

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் கடைவீதியில் புதுக்கோட்டை- ஆலங்குடி மெயின் ரோட்டில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குடியிருப்பு வீடுகள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த வீடுகள் அமைக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் ஆபத்தான நிலையில் பயன்பாடு இன்றி உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆபத்தான நிலையில் இருந்த கட்டிடத்தை இடித்து அகற்றினர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். பொதுமக்கள், திருவரங்குளம்

மேலும் செய்திகள்