தெருநாய்கள் தொல்லை

Update: 2024-02-04 17:37 GMT

பள்ளிபாளையம் நகராட்சியில் மொத்தமாக 21 வார்டுகள் உள்ளன. இந்நிலையில் பள்ளிபாளையம் நகராட்சி பகுதி முழுவதும், ஏராளமான கோழி இறைச்சி கடைகள், மாலை நேர சாலையோர கடைகள், உணவகங்கள் என அதிகளவில் கடைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் இறைச்சி கடைகளில் இருந்து வீசப்படும் இறைச்சி கழிவுகளை, உண்பதற்காக, கூட்டம் கூட்டமாக தெரு நாய்கள் சுற்றுகிறது.ஒரு சில நேரங்களில் கூட்டமாக சுற்றித் திரியும் தெருநாய்கள் அவ்வழியே செல்வோரை கடித்து விடுகிறது. மேலும் தெருநாய்களை கண்டு அவ்வழியே செல்லும் பொதுமக்கள் அச்சத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

-மாறன், பள்ளிபாளையம்.

மேலும் செய்திகள்