தடுப்புச்சுவர் தேவை

Update: 2024-02-04 17:29 GMT

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே மஞ்சாரஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட செல்லமுடி பஸ் நிலைய பகுதியில் சாலையின் குறுக்கே ஓடை அமைந்துள்ளது. இதற்காக சிறிய அளவிலான தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தரைப்பாலமானது, ஏரியூர் -மேச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ளது. ஆனால் இந்த தரைப்பாலத்தின் இருபுறங்களிலும் தடுப்புசுவர் அமைக்கப்படாமல் உள்ளதால், சிறு, சிறு விபத்துக்கள் நடந்து வருகிறது. இந்த சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கிறது. எனவே அதிகாரிகள் உடனடியாக தடுப்புச்சுவர் அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

-அருண், ஏரியூர்.

மேலும் செய்திகள்