தெருநாய்கள் தொல்லை

Update: 2024-02-04 17:19 GMT

கிருஷ்ணகிரி நகரின் பல்வேறு பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. குறிப்பாக சாலையோரம் சுற்றித்திரியும் தெருநாய்கள் இரவு நேரங்களில் சாலையில் செல்வோரை பின் தொடர்ந்து கடிக்கிறது. இதனால் சாலையில் சிறு, சிறு விபத்துகள் ஏற்படுகிறது. எனவே தெருநாய்களை பிடித்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சபரீஷ், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்