புளியமரத்தை அகற்ற வேண்டும்

Update: 2024-02-04 17:16 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி கீழ் தெருவில் பழைய போலீஸ் நிலையம் அருகே புளியமரம் உள்ளது. இந்த மரம் விரிசல் அடைந்து எந்த நேரத்திலும் முறிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் சென்று வருகின்றனர். மேலும் நெடுஞ்சாலை அருகே இருப்பதால் பெரும் சேதம் ஏற்படுவதற்கு முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த மரத்தை அகற்ற வேண்டும்.

-ராமசாமி, சூளகிரி.

மேலும் செய்திகள்