தடுப்பு சுவர் அமைக்கலாமே !

Update: 2024-01-21 17:12 GMT

நாமக்கல் கொசவம்பட்டி ஏரியையொட்டி ரெயில் நிலையம் அமைந்து உள்ளது. இங்கு செல்ல கொசவம்பட்டி ஏரிக்கரையில் இருந்து புதிதாக தார்சாலை வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சாலையையொட்டி கழிவுநீர் வாய்க்கால் உள்ளது. இரவு நேரங்களில் வாகனங்களில் ரெயில் நிலையத்திற்கு செல்வோர் கழிவுநீர் வாய்க்காலில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே ரெயில் நிலையம் செல்லும் சாலையில் தடுப்புசுவர் ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுகுமார், நாமக்கல்.

மேலும் செய்திகள்