தெரு நாய்கள் தொல்லை

Update: 2024-01-14 19:11 GMT

ராசிபுரம் அருகே முள்ளுக்குறிச்சி மற்றும்அண்ணா நகர் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக தெருநாய்கள் தொல்லை அதிக அளவில் காணப்படுகிறது. 10-க்கும் மேற்பட்ட பொதுமக்களை தெருநாய்கள் கடித்துள்ளது. மேலும் 30-க்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்து கொன்றன. இதனால் அந்த பகுதி மக்கள் ஒரு வித பயத்துடன் நடமாட வேண்டியுள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் தெருநாய்கள் தொல்லைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அன்புநிதி, முள்ளுக்குறிச்சி.

மேலும் செய்திகள்