‘தினத்தந்தி’க்கு பாராட்டு

Update: 2024-01-14 19:09 GMT

சேந்தமங்கலம் அருகே முத்துகாப்பட்டி பஸ் நிறுத்தத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள ஒரு வளைவில் சாலையில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டிருந்தது. இது தொடர்பாக கடந்த 4-ந் தேதி ‘தினத்தந்தி’யில் செய்தி வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பள்ளத்தை சீரமைத்தனர். இதனால் தற்போது வாகன ஓட்டிகள் அப்பகுதியில் அச்சமின்றி சென்று வருகின்றனர். இதற்காக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய ‘தினத்தந்தி’க்கும் அந்த பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

-சோமு, சேந்தமங்கலம்.

மேலும் செய்திகள்