அனுமதியின்றி வைக்கப்படும் பேனர்கள்

Update: 2024-01-07 17:40 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அடுத்து அத்தனூர் பஸ் நிறுத்தம் அருகே அனுமதி இல்லாமல் அதிக அளவில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்களும் மற்றும் சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய அனுமதி இல்லாமல் வைத்துள்ள பேனர்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-செந்தில், அத்தனூர், நாமக்கல்.

மேலும் செய்திகள்