பாழடைந்த கட்டிடத்தை அகற்ற கோரிக்கை

Update: 2024-01-07 17:37 GMT

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேளாண்மை துறைக்கு என்று தனியாக கட்டிடம் இருந்தது. பின் இந்த கட்டிடம் சேதமடைந்ததால் பொன்னேரி கைக்காட்டில் 4 ஆண்டுகளுக்கு முன்பு புதிய கட்டிடம் தொடங்கப்பட்டு செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்தநிலையில் சேதமடைந்த கட்டிடம் அப்படியே இருக்கிறது. மேலும் அந்த கட்டிடத்தில் மேற்புறம் செடிகள் முளைத்தும் காட்சி அளிக்கிறது. எனவே இந்த பாழடைந்த கட்டிடத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மைக்கேல், எருமப்பட்டி.

மேலும் செய்திகள்