கூடுதல் போலீசார் வேண்டும்

Update: 2023-12-31 10:44 GMT

பொள்ளாச்சி அருகே ஆழியாறில் உள்ள குரங்கு நீர்வீழ்ச்சி, அணை, பூங்கா மற்றும் வண்ண மீன்காட்சியகத்தை கண்டு களிக்க விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் வாகனங்களில் வருவதால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை ஒழுங்குபடுத்த போதிய போலீசார் பணியில் இல்லை. இதனால் நீண்ட நேரம் காத்திருந்து அவதிப்பட நேரிடுகிறது. எனவே கூடுதல் போலீசாரை நியமித்து, இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்