புதிய அங்கன்வாடி மையம் வேண்டும்

Update: 2023-12-24 16:59 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட எச்சம்பட்டியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் 40 குழந்தைகள் உள்ளனர். இந்த கட்டிடம் சேதமடைந்ததால் கடந்த 2 ஆண்டுக்கும் மேலாக குழந்தைகளுக்கு தனியார் கட்டிடத்தில் கல்வி கற்பிக்கப்படுகிறது. புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பலமுறை முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே குழந்தைகளின் நலன்கருதி புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொன்னுசாமி, எச்சம்பட்டி.

மேலும் செய்திகள்