பள்ளி வளாகத்தில் மதுபாட்டில்

Update: 2023-12-17 16:54 GMT

தர்மபுரி மாவட்டம் கொப்பகரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சமூக விரோதிகள் இரவு நேரங்களில் பள்ளி வளாகத்தில் மது அருந்திவிட்டு பாட்டில்களை அங்கேயே போட்டுவிட்டு சென்றுவிடுகின்றனர். இதனால் பள்ளிக்கு வரும் மாணவர்கள், ஆசிரியர்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே இவ்வாறு செயல்படும் சமூகவிரோதிகள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரவி, தர்மபுரி.

மேலும் செய்திகள்