சாலையோர தடுப்புகள் அமைக்கப்படுமா?

Update: 2023-12-10 16:41 GMT

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே மஞ்சாரஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட செல்லமுடியில் சாலையோர தடுப்புகள் எதுவும் இல்லை. இதனால் அந்த வழியே இருசக்கர வாகனங்களில் வேகமாக வருவோர் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் சாலையோரம் முட்புதர்கள் இருப்பதால் பாம்புகள் உள்ளிட்ட விஷப்பூச்சிகளின் நடமாட்டமும் அதிகமாக உள்ளது. எனவே இந்த சாலையோரம் விபத்துகளை தடுக்க தடுப்புகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சதா, செல்லமுடி, தர்மபுரி.

மேலும் செய்திகள்