பஸ்நிலையத்தில் நாய்கள் தொல்லை

Update: 2023-11-26 11:51 GMT

பஸ்நிலையத்தில் நாய்கள் தொல்லை

காங்கயம் மத்திய பஸ் நிலையத்தில் இரவு-பகல் எந்தநேரமும் 10-க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித்திரிகின்றன.இதனால் பயணிகள் அச்சத்துடன் நின்று பஸ் ஏற வேண்டிய நிலை உள்ளது.குறிப்பாக பெண்கள்,சிறுமிகள் மிகவும் அச்சத்துடன் பஸ் நிலையத்தில் தங்கள் ஊர் பஸ் வரும் வரை காத்து நிற்கவேண்டிய அவல நிலை உள்ளது. எனவே காங்கயம் நகராட்சி நிர்வாகம் காங்கயம் பஸ் நிலையத்தில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

==========

சோமு,காங்கயம்

6380049037

மேலும் செய்திகள்