இறைச்சி கழிவுகள்

Update: 2023-11-26 10:43 GMT

ஆனைமலையை அடுத்த கெங்கம்பாளையம் பகுதியில் தரைமட்ட பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலத்தின் கீழ் ஓடும் ஆற்றில் இறைச்சி கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகளை சிலர் கொட்டிவிட்டு செல்கின்றனர். இதன் காரணமாக ஆற்று நீர் மாசுபட்டு வருகிறது. இதனால் அந்த நீரை குடிக்கும் விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே ஆற்றில் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்