பயணிகள் நிழற்கூடம் சீரமைக்கப்படுமா?

Update: 2023-10-08 17:08 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த புதூர் புங்கனை கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் பயணிகள் நிழற்கூடம் கட்டப்பட்டது. தற்போது இந்த நிழற்கூடம் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே இந்த பயணிகள் நிழற்கூடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சந்தோஷ், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்