நெருநாய்கள் தொல்லை அதிகரிப்பு

Update: 2023-10-04 09:48 GMT

நகரங்களிலும், கிராமங்களிலும் கொசுத்தொல்லைக்கு மக்கள் அவதிப்படும் நிலையில் சமீப காலமாக நாய்களின் எண்ணிக்கை அதிகரித்தால் பொதுமக்கள் சாலையில் செல்ல அச்சப்படுகிறார்கள். தனியாக செல்லும் சிறுவர்களையோ, சிறுமிகளையோ நாய்கள் துரத்தி கடித்து குதறும் காட்சிகள் நெஞ்சை பதற வைப்பதாக உள்ளது. சந்திராபுரம் சங்கர் நகர் தெருக்களில் தெருநாய்கள் அதிகமாக திரிவதால் குழந்தைகள் நடமாடுவதற்கு பயமாக இருக்கிறது. எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அந்த பகுதி மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.


மேலும் செய்திகள்