சுகாதார சீர்கேடு

Update: 2023-09-20 17:50 GMT

சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சி செல்லியம்மன் கோவில் மேற்கில் பெரியசாமி தெரு உள்ளது. இந்த பகுதியில் சிலர் தினந்தோறும் குப்பையை கொட்டி எரிக்கிறார்கள். இதனால் அவ்வழியே செல்லும் வாகனஓட்டிகள், பொதுமக்களுக்கு கண்எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இவ்வாறு குப்பைகளை கொட்டி எரிப்பதால் அங்கு சுகாதார சீர் கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜ்குமார், வாழப்பாடி.

மேலும் செய்திகள்