காட்பாடி கழிஞ்சூரில் வஞ்சூர் செல்லும் மெயின் ரோட்டில் சாலையோரம் மர்ம நபர்கள் சிலர் குப்பைகளை கொட்டி தீ வைக்கின்றனர். இதனால் அந்தப் பகுதியில் புகைமூட்டம் ஏற்படுகிறது. மேலும் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் புகைமூட்டத்தால் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையோரம் குப்பைகளை கொட்டி தீ வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தாமரைக்கண்ணன், வஞ்சூர்.