குரங்குகள் தொல்லை

Update: 2023-05-14 17:11 GMT

அரக்கோணம் ரெயில் நிலைய நடைமேடைகளில் குரங்குகள் அதிகமாக சுற்றித் திரிகின்றன. இதனால் நடைமேடையில் வரும் பயணிகள் மற்றும் சிறுவர், சிறுமிகள் கையில் எடுத்துச் செல்லும் பொருட்கள், குடிநீர் பாட்டில்ளை பிடுங்கி கொண்டு ஓடுகின்றன. குரங்குகளால் பயணிகளுக்கு தொல்லை ஏற்படுகிறது. ரெயில்வே நிர்வாகம் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட ஏற்பாடு செய்ய வேண்டும். பயணிகளின் பாதுகாப்பான பயணத்துக்கு வழிவகை செய்ய வேண்டும்.

- செண்பகம், அரக்கோணம்.

மேலும் செய்திகள்