மதுபான கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்

Update: 2023-03-01 17:02 GMT

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள அரசு மதுபானக்கடை அருகில் அனுமதியின்றி நடக்கும் மதுபான பாரில் எந்நேரமும் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த மதுபான கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.

-பொதுமக்கள், நாட்டறம்பள்ளி. 

மேலும் செய்திகள்