உணவின் தரம் உறுதி செய்யப்படுமா?

Update: 2023-01-18 13:25 GMT

அரக்கோணத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் வழங்கப்படும் இட்லி, பொங்கல் உள்ளிட்ட உணவின் தரம் குறைந்த நிலையில் உள்ளது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வரும் பெரும்பாலான ஏழை எளிய மக்கள் குறைந்த விலையில் உணவு கிடைப்பதால் காலை மற்றும் மதியத்தில் இங்கு வந்து உணவு சாப்பிடுகின்றனர். ஆனால் இங்கு உணவின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உரிய ஆய்வு மேற்கொண்டு உணவின் தரத்தை உறுதி செய்ய வேண்டும்.

-நவீன், சுவால்பேட்டை அரக்கோணம்.

மேலும் செய்திகள்