தண்ணீர் சூழ்ந்த சுடுகாடு

Update: 2023-08-20 17:28 GMT

ஜோலார்பேட்டை அருகே ஏலகிரிகிராமத்தில் உள்ள ஏலகிரி ஏரியையொட்டி சுடுகாடு உள்ளது. இந்தச் சுடுகாட்டில் வக்கணம்பட்டி, சந்தைக்கோடியூர், புதுஓட்டல் தெரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இறந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக ஏலகிரி ஏரியில் நீர் நிரம்பியது. இதனால் சுடுகாடு பகுதியை நீர் சூழ்ந்துள்ளது. சுடுகாட்டில் உடல்களை அடக்கம் செய்ய முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஏலகிரி ஏரியையொட்டி உள்ள சுடுகாடு பகுதியில் சுற்றுச் சுவர் அமைக்க வேண்டும். தற்காலிக நடவடிக்கையாக சுடுகாட்டில் தேங்கி உள்ள தண்ணீரை அகற்ற வேண்டும்.

-எஸ்.ரமேஷ், சந்தைக்கோடியூர்.

மேலும் செய்திகள்