ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்ற வேண்டும்

Update: 2023-01-08 17:27 GMT

வாலாஜா நகரில் எம்.பி.டி.ரோட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர். பஸ் நிலையம் அருகில் அம்மா உணவகம் முன்பு நடைபாதையில் மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு இரும்பு கேட் பல வருடங்களாக வைக்கப்பட்டுள்ளது. தற்போது ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டவர்கள் கூட அதை அகற்றாமல் அப்படியே விட்டு விட்டனர். இதனால் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. எனவே சரியான முறையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

-ராஜ்குமார், வாலாஜா.

மேலும் செய்திகள்