வாலாஜா பஸ் நிலைய முன்பக்கம், பின்பக்க நுழைவு வாயில் பகுதிகளில் பயணிகள் பஸ்களில் ஏறும் இறங்கும் பகுதிகளை தள்ளுவண்டி வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் பயணிகள், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். பஸ் நிலைய வளாகத்தில் உள்ள கேமராக்கள் மூலம் இவர்களை கண்டறிந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி அதிகாரிகள் முன் வர வேண்டும்.
-தேவராஜ், வாலாஜா.