வாரச்சந்தை அதற்குரிய இடத்தில் நடக்குமா?

Update: 2023-03-22 17:02 GMT

ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியில் புதன்கிழமை தோறும் வாரச் சந்தை நடக்கிறது. அதில் சந்தைக்கோடியூர், வக்கணம்பட்டி, மலையடிவாரம், மேட்டுச்சக்கரகுப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சந்தைக்கு காய் கறிகளை வாங்க வருகிறார்கள். தற்போது வாரச்சந்தை சாலையோரம் நடப்பதால் பொதுமக்கள் சாலையில் நின்று காய்கறிகளை வாங்குகிறார்கள். இதனால் போக்குவரத்து ெநரிசல் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து வாரச்சந்தை சாலையோரம் நடக்காமல், வாரச்சந்தைக்கென நகராட்சி சார்பில் ஒதுக்கப்பட்ட இடத்தில் நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-உதயகுமார், சந்தைகோடியூர்.

மேலும் செய்திகள்