பஸ் நிலையத்தில் இடையூறு

Update: 2025-06-22 19:35 GMT

திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உள்ளூர் மட்டுமின்றி வெளியூரில் இருந்து வருகை தருகின்றனர். பஸ் நிலையத்தில் வேலூர் மற்றும் உள்ளூர் பஸ்கள் நிற்கும் பகுதி என 2 இடங்களில் நிழற் கூரைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பயணிகள் நிற்கும் இடத்தில் பலர் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

-கண்ணன்,திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்