தடுப்பணை சேதம்

Update: 2025-06-22 20:00 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் கல்பட்டு ஏரி பகுதியில் ஒரு தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டு பெய்த கனமழையின்போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தடுப்பணை உடைந்து சேதமானது. அந்தத் தடுப்பணையில் தண்ணீரை சேமிப்பதற்கும், கால்நடைகளின் குடிநீருக்கும் பயன்பட்டு வந்தது. அந்தத் தடுப்பணை சேதமானதால் தண்ணீர் முழுவதும் வீணாக வெளியேறி வருகிறது. தண்ணீரை சேமிக்க தடுப்பணையைச் சீரமைக்க வேண்டும்.

-கண்ணன், கல்பட்டு.

மேலும் செய்திகள்