வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் பூக்கள் விற்கும் பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன. அந்தக் கடைகள் அனைத்தும் மக்கள் நடந்து செல்லும் பாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளன. ஆண்களும், பெண்களும் நெரிசலில் இடித்துக்கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வேல்முருகன், வேலூர்.