வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே காட்பாடி செல்லும் சாலையில் நேற்று மாலை மாடுகள் சுற்றித்திரிந்தன. இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. மேலும் நடந்து சென்ற பொதுமக்கள் அச்சத்தோடு அந்த வழியை கடந்து சென்றனர். சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாயவன், வேலூர்.