வாலாஜா நகர பகுதியில் போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் இடையூறாக தொல்லை தரும் வகையில் சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. நகராட்சி பணியாளர்கள் மாடுகளை பிடித்து நகராட்சி பவுண்டில் அடைக்க வேண்டும். அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். மேலும் உரிமை கோரப்படாத மாடுகளை கோசாலையில் ஒப்படைக்க வேண்டும் அல்லது பொது ஏலத்தில் விட வேண்டும்.
-காளிமுத்து, வாலாஜா.