மாறிய பெயர் பலகை

Update: 2023-10-22 16:54 GMT

செங்கம் முதல் திருவண்ணாமலை வரை தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையில் அமைக்கப்பட்டு, ஊர் பெயர் பலகைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. செங்கம் அருகே உள்ள கரியமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட அண்டபேட்டை கிராமத்துக்கு செல்லும் வழி பெயர் பலகை கடந்த சில நாட்களுக்கு முன்பு வைக்கப்பட்டது. அந்தப் பலகையில் அண்டபேட்டை என்பதற்கு பதிலாக ஆண்டாப்பட்டு என்று வேறு ஒரு பகுதியில் உள்ள ஊரின் பெயரை மாற்றி பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் புதிதாக அப்பகுதிக்கு வருபவர்கள் குழப்பத்துக்கு ஆளாகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெயர் பலகையை சரியாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாலச்சந்திரன், செங்கம்.

மேலும் செய்திகள்