மயான பாதை, காரிய மண்டபம் பழுது

Update: 2025-08-24 16:43 GMT

ராணிப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட காரை பகுதியில் இறந்தவர் களின் உடலை சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும் மயான பாதை பழுதடைந்துள்ளது. இதனால் அந்த வழியாக இறந்தவர்களின் உடல்களை எடுத்துச்செல்ல சிரமமாக உள்ளது. அதேபோல், இறந்தவர்களுக்கு காரியம் செய்யும் மண்டபமும் பழுதடைந்துள்ளது. மழைப் பெய்தால் நீர் கசிவு ஏற்படுகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் மயான பாதை, காரிய மண்டபத்தை சீர் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-த.நித்தியானந்தம், காரை. 

மேலும் செய்திகள்