வேலூர் காட்பாடி ஏரி அருகே மலைபோல் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. மேலும் அங்கு இறைச்சி கழிவுகளும் கிடப்பதால் துர்நாற்றம் வீசி வருகிறது. ஏரி அருகே இதுபோல் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடப்பதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மலை போல் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற முன்வர வேண்டும்.
-சண்முகசுந்தரம், காட்பாடி.