வேலூர் காட்பாடி ஓடை பிள்ளையார் கோவில் அருகே சாலையோரம் பட்டுப்போன பெரிய மரம் ஒன்று ஆபத்தான நிலையில் நிற்கிறது. காற்று அடிக்கும்போது அந்த மரத்தில் இருந்து கிளை முறிந்து கீழே விழுகிறது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும் அந்த மரம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழலாம். எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பட்டுப்போன மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாயவன், வேலூர்.