வேலூரை அடுத்த அரியூர் நாராயணி பள்ளி அருகே மெயின் ரோட்டில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயில் சிமெண்டு கான்கிரீட் உடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் அதன் அருகே உள்ள பெயர் பதாகை உடைந்து பள்ளத்தை மூடியிருப்பது போல் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நாராயணன், அரியூர்.