பயனற்றுக் கிடக்கும் பள்ளிக்கூடம்

Update: 2022-11-27 11:27 GMT

பேரணாம்பட்டு ஓங்குப்பம் ரோடு பகுதியில் ரூ.5 கோடியில் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி கட்டப்பட்டது. திறப்பு விழா நடத்தி ஒருசில மாதங்கள் மட்டுமே பள்ளிக்கூடம் செயல்பட்டது. அதன் பிறகு பேரணாம்பட்டுக்கு மாற்றப்பட்டது. அங்குள்ள பள்ளி கட்டிடம் பல ஆண்டுகளாக பயனற்று மோசமான நிலையில் உள்ளது. அந்தப் பள்ளியில் இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. பயனற்றுக் கிடக்கும் கட்டிடத்தில் அதிகாரிகள் வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்தலாம். இல்லையெனில், மீண்டும் பள்ளியை தொடங்கி நடத்தலாம். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-த.வெங்கடேசன், பேரணாம்பட்டு. 

மேலும் செய்திகள்