பள்ளிக்கட்டிடம் கட்ட வேண்டும்

Update: 2022-08-11 09:03 GMT

கே.வி.குப்பத்தை அடுத்த ஆலங்கனேரியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பாழடைந்து போனதால், அதை இடித்து அகற்றி 3 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை அதற்கு பதிலாக புதிய கட்டிடம் கட்டப்படவில்லை. இதனால் மாணவர்கள் பாடம் படிக்க போதிய இட வசதி இல்லாமல் மரத்தடியில் அமர்ந்து பாடம் படித்து வருகின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் பல முறை எடுத்துக் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. உடனடியாக பள்ளிக் கட்டிடம் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திவாகரன், கே.வி.குப்பம் 

மேலும் செய்திகள்