தர்மபுரி மாவட்டத்தில் காலை, மாலை நேரங்களில் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டுகின்றனர். மேலும் இருசக்கர வாகனங்களில் 3 அல்லது 4 பேர் ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர். இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே மாணவர்களின் பாதுகாப்பு கருதி சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு செய்து ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இருசக்கர வாகனங்களை ஓட்ட தடை விதிக்க வேண்டும்.
-ராமலிங்கம், தர்மபுரி.