கச்சிராயப்பாளையம் பகுதியில் குரங்குகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவை திறந்திருக்கும் வீடுகள், கடைகளுக்குள் புகுந்து பொருட்களை சூறையாடிச் செல்கிறது. மேலும் விரட்ட வருபவர்களை கடிக்க பாய்கின்றன. எனவே அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடித்து காப்புக்காட்டில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.