வாலாஜா நகராட்சிக்கு உட்பட்ட பூ மார்க்கெட்டுக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள், வியாபாரிகள் பூக்களை வாங்க வருகிறார்கள். ஆனால், மார்க்கெட்டில் வியாபாரிகள் பூக்களை வெறும் தரையில் கொட்டி ஏலம் விடுகிறார்கள். சுகாதார சீர்கேடான முறையில் விற்கப்படும் பூக்களை வாலாஜா நகராட்சி நடவடிக்கை எடுத்து தூய்மையான முறையில் விற்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
-நித்யானந்தம், காரை.