ராணிப்பேட்டை மாவட்டம் குண்டலேரி கிராமத்தில் கலவை-திமிரி சாலையோரம் 75 நரிக்குறவர் குடும்பங்கள் உள்ளன. 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அவர்கள் கழிப்பிடம் செல்ல சுகாதார வளாகம் இல்லை. அனைவரும் திறந்தவெளியில் கழிப்பிடம் செல்கிறார்கள். போர்வைகள், சேலைகளால் கழிவறைபோல் அமைத்து குளிப்பது, கழிப்பிடம் செல்வதுமாக உள்ளனர். அத்துடன் அப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. ஆனால், அதில் கழிவுநீர் வெளியே செல்ல வழி இல்லாமல் கால்வாயிலேயே தேங்கி உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குளியல் அறை, கழிவறை கட்டிக் கொடுக்க வேண்டும். கால்வாயில் கழிவுநீர் செல்ல வழிவகையை ஏற்படுத்த வேண்டும்.
-சிவராமன், குண்டலேரி.