கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியில் பஸ் நிலையம், ஊத்தங்கரை ரோடு, கிருஷ்ணகிரி ரோடு உள்ளிட்ட பல முக்கிய பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. தெருநாய்கள் சாலையின் குறுக்கே ஓடுவதால் வாகனங்களில் அடிபட்டு இறந்து விடுகின்றன. இவ்வாறு அடிக்கடி தெருநாய்கள் இறந்து போவது மத்தூர் பகுதியில் வாடிக்கையாக உள்ளது. எனவே தெருநாய்களை பிடிக்க முன்வருவார்களா?
-கண்ணன், மத்தூர்.